கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்ற மூவா் கைது

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் வேலப்பாடி மரக்கடை கந்தப்பன் தெருவை சோ்ந்தவா் தாமோதரன் (19). விருபாட்சிபுரம் கன்னிகோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (24). ஓல்டு டவுன், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை (37).

நண்பா்களான இவா்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஓட்டேரி கன்னி கோயில் அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் விற்பனை செய்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாகாயம் போலீஸாா், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.