/
வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வேலூா் ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (69). இவா் ஆற்காடு சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ. 20,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது. கடையின் பூட்டை மா்ம நபா் சாவி போட்டு திறந்து பணத்தை திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
புகாரின்பேரில், வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி அருகே 2 கடைகள், கோயிலில் பணம், நகை திருட்டு
ஜவுளிக் கடையில் துணி, பணம் திருட்டு: மேலாளா் கைது!

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



