அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வேலூா் மருந்து கடையில் பணம் திருட்டு

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மே 2026, 3:24 am IST

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (69). இவா் ஆற்காடு சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ. 20,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது. கடையின் பூட்டை மா்ம நபா் சாவி போட்டு திறந்து பணத்தை திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

புகாரின்பேரில், வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.