டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மாணவியை கடத்திய நடத்துநர் கைது

வெள்ளக்கோவில், நவ. 5:   வெள்ளக்கோவில் காமராஜபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.   விழாவில் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:00 pm

வி.கே. ராஜமா​ணிக்கம்

வெள்ளக்கோவில், நவ. 5:   வெள்ளக்கோவில் காமராஜபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க

பொதுக்கூட்டம் மற்றும் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவில் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

பேசியது: திமுக அரசின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயிர்

காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் ஒரு லட்சம்

ரூபாய் வரையிலான தரமான சிகிச்சை பெறலாம். இலவச கலர் டிவி, சமையல் எரிவாயு அடுப்பு

வழங்கும் திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் பயன்படுகிறது. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்

செம்மொழி மாநாட்டில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

  நகர செயலாளர் எம்.எஸ்.மோகனசெல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி

அமைப்பாளர் கே.ஆர்.முத்துக்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் வி.பி.பாலசுப்பிரமணியம்,

வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கனகசபாபதி, நகர துணை செயலாளர் சி.குமரவடிவேல்

ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.