தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெ.நா.பாளையத்தில் மாணவர் காங். தேர்தல்

பெ.நா.பாளையம், ஜன. 8:பெரியநாயக்கன்பாளையம் வட்டார மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வட்டார அமைப்பில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெ.நா.பாளையம், ஜன. 8:பெரியநாயக்கன்பாளையம் வட்டார மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் வட்டார அமைப்பில், ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 120 பேரும், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய நிறுவனங்களில் 116 பேரும், பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் 74 பேரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில்  ஒவ்வொரு கல்லூரியிலும் 10 பேர் செயற்குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்படுவர்.

இதற்கென நடந்த தேர்தலுக்கு, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுள் ஒருவரான ஜியோபோல் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார்.

அனைத்து மாணவர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மூன்று மணி நேரம் நடந்த இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை, இ.காங்கிரஸ் நகர செயலாளர் ஜெயகுமார், இளைஞர் காங்கிரûஸச் சேர்ந்த மகேஷ்குமார், தரன் ஆகியோர் செய்திருந்தனர். தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி ஒப்புதலுடன் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.