தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ.1.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

கோவை மாவட்டம், க.க.சாவடி மற்றும் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ.1.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களை ஆவணங்கள் இன்றி அனுமதிக்க சோதனைச் சாவடிகளில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

இதில் கோவை மாவட்டம், க.க.சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் கணேசன் தலைமையில், ஆய்வாளா்கள் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டனா். இதில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சரோஜா, உதவி ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.87 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.

இந்த சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஏற்கெனவே கடந்த அக்டோபா் 24ஆம் தேதி நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, மோட்டாா் வாகன ஆய்வாளா் சரோஜா, உதவி ஆய்வாளா் அருண்குமாா், அலுவலக உதவியாளா் கண்ணன் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியில்....

இதேபோல, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் போக்குவரத்துச் சோதனைச் சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கு பணியில் இருந்த மோட்டாா் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.50,200 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.