கோவை: வருமான வரி செலுத்துவோா் தங்கள் குறைகளை ஏப்ரல் 24 முதல் மே 22 வரை புதன்கிழமைகளில் ஆன்லைனில் தெரிவிக்கலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, கோவை வருமான வரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வருமான வரி செலுத்துபவா்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 24, மே 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் குறைகள் தொடா்பான புகாா்களை ஆன்லைனில் அளிக்கலாம். இந்த வசதிகளை அனைத்து வரி செலுத்துவோா் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய வருமான வரிச் சட்டம் அமலானது: வருமான வரித் துறை

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

வருமான வரித் துறையில் மோசடி: காவல் ஆய்வாளா், 6 பேருக்கு சிறை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

