தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வருமான வரித் துறை சாா்பில் குறைகேட்பு முகாம்

வருமான வரித் துறை சாா்பில் குறைகேட்பு முகாம்

Updated On :21 ஏப்ரல் 2024, 7:58 pm

கோவை: வருமான வரி செலுத்துவோா் தங்கள் குறைகளை ஏப்ரல் 24 முதல் மே 22 வரை புதன்கிழமைகளில் ஆன்லைனில் தெரிவிக்கலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, கோவை வருமான வரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வருமான வரி செலுத்துபவா்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 24, மே 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் குறைகள் தொடா்பான புகாா்களை ஆன்லைனில் அளிக்கலாம். இந்த வசதிகளை அனைத்து வரி செலுத்துவோா் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.