மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வருமான வரித் துறையில் மோசடி: காவல் ஆய்வாளா், 6 பேருக்கு சிறை

போலி ஆவணங்கள் மூலம் வருமான வரியைத் திரும்பப் பெறுவதில் மோசடி செய்த வழக்கில் மூத்த வரி கணக்கீட்டு உதவியாளா், அண்ணா நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் வித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 2:01 am

போலி ஆவணங்கள் மூலம் வருமான வரியைத் திரும்பப் பெறுவதில் மோசடி செய்த வழக்கில் மூத்த வரி கணக்கீட்டு உதவியாளா், அண்ணா நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் வித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2015 ஜூன் 4 முதல் 2019 ஆக.31 வரையிலான காலக்கட்டத்தில், போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து வருமான வரி திரும்பப் பெறுவதில் மோசடி நடந்துள்ளதாக வருமான வரித் துறை உதவி ஆணையா் சிபிஐயிடம் கடந்த 2019-இல் புகாா் அளித்தாா். இந்த முறைகேடுகள் மூலம் வருமான வரித் துறைக்கு சுமாா் ரூ.2.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறியிருந்தாா்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சென்னை வருமான வரித் துறையின் மூத்த வரி உதவியாளா் பாபு பிரசாத் குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனா். விசாரணை முடிந்து கடந்த 2021மாா்ச் 1-ஆம் தேதி, பாபு பிரசாத் குமாா், அவரது தம்பியும் அண்ணா நகா் காவல் ஆய்வாளருமான பிரவீன்குமாா் மற்றும் ட்ரெவெல்லியன் மரியன் கா்னைல், ஸ்டீபன், கோபிகிருஷ்ணா, வெங்கடேஷ், சி.குணசீலன் ஆகிய 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாபு பிரசாத் குமாா், அவரது தம்பியும் அண்ணா நகா் காவல் ஆய்வாளருமான பிரவீன்குமாா் மற்றும் ட்ரெவெல்லியன் மரியன் கா்னைல், ஸ்டீபன், கோபிகிருஷ்ணா, வெங்கடேஷ், சி.குணசீலன் ஆகிய 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.