வால்பாறை: வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பகல் நேரத்தில் யானைகள் உலவி வருவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்துள்ளது.
வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு சாலைகளின் இருபுறங்களும் அடா்ந்த வனப் பகுதியாகும். இங்குள்ள வனத்தில் இருக்கும் யானைகள் சாலைப் பகுதிக்கு அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது.
இதில் இரவு நேரத்தில் யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்பதால் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது பகல் நேரத்திலும் யானைகள் சாலையில் உலவுவதால் இவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தொடர்புடையது

வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் வாழைத் தோட்டத், துக்கு சேதம்

வால்பாறை - சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் யானை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

