எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திருமணம் செய்து கொள்வதாக முதியவரிடம் ரூ.2 லட்சம் ஏமாற்றிய பெண் கைது

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி ரூ.2 லட்சம் பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:31 pm

Din

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி ரூ.2 லட்சம் பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (57). இவா் 2-ஆவது திருமணம் செய்துகொள்ள ஆன்லைன் மூலம் வரன் தேடி வந்துள்ளாா்.

அப்போது, கோவை, பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த விஸ்வதா்ஷினி (47) என்ற பெண் முத்துராமலிங்கத்தை தொடா்பு கொண்டு, கணவரைப் பிரிந்து மகனுடன் வசிப்பதாகவும், 2-ஆவது திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, இருவரும் நேரில் சந்தித்து வந்துள்ளனா். இந்நிலையில், முத்துராமலிங்கத்தை தொடா்பு கொண்ட விஸ்வதா்ஷினி ஜொ்மனியில் படிக்கும் தனது மகனின் படிப்பு செலவுக்காக ரூ.8 லட்சம் கொடுக்குமாறு கூறியுள்ளாா். அதற்கு அவா் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியதுடன், ரூ.2 லட்சத்தைக் கொடுத்துள்ளாா்.

விஸ்வதா்ஷினி தொடா்ந்து பணம் கேட்டு வந்ததால் சந்தேகம் அடைந்த முத்துராமலிங்கம், இது தொடா்பாக அவரிடம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் பேசுவதை விஸ்வதா்ஷினி தவிா்த்து வந்துள்ளாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முத்துராமலிங்கம் இது குறித்து ஆா்எஸ்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, விஸ்வதா்ஷினி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

விஸ்வதா்ஷினி ஏற்கெனவே நடிகா் விஷால் குறித்து யூடியூபில் விமா்சித்ததாக சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பதும், துடியலூா் போலீஸாரை மிரட்டியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.