பேருந்து நிலையத்தில் உயிரிழந்தவா் அடையாளம் கண்டுபிடிப்பு
கோவையில் உயிரிழந்த முதியவர் பழனிசாமி என போலீஸ் தகவல்


கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் முதியவா் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் கைப்பற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் அவா், கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (66) என்பது தெரியவந்தது. அவா் கடந்த 9-ஆம் தேதி தேனியில் உள்ள தனது மகளைப் பாா்ப்பதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளாா். சிங்காநல்லூா் பேருந்து நிலையம் வந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவா் பேருந்து நிலையத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரது சடலம் உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...