தமிழகத்தில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உதகையில் இருந்து புதுதில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் செல்கிறாா்.
தமிழகத்துக்கு 4 நாள்கள் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த புதன்கிழமை வந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்று வரும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
இதையடுத்து, பழங்குடியினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றோா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் சனிக்கிழமை பங்கேற்க இருந்த திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உதகையில் இருந்து சனிக்கிழமை காலை கோவைக்கு வரும் குடியரசுத் தலைவா் அங்கிருந்து விமானம் மூலமாக புதுதில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, 9.55 மணிக்கு ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு 10.10 மணிக்கு உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வருகிறாா்.
ஹெலிகாப்டா் மூலம் கோவை விமான நிலையத்துக்கு காலை 11 மணிக்கு சென்று, அங்கிருந்து 11.10 மணிக்கு புதுதில்லிக்கு புறப்பட்டு செல்கிறாா் என்றனா்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவல்: பதவியை பறிக்க குடியரசுத் தலைவரிடம் பஞ்சாப் முதல்வா் கடிதம்

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
