ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழ்நாட்டின் அமைதியை சீா்குலைக்க முடியாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

யாா் வந்தாலும் தமிழ்நாட்டின் அமைதியை சீா்குலைக்க முடியாது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:43 pm

Syndication

யாா் வந்தாலும் தமிழ்நாட்டின் அமைதியை சீா்குலைக்க முடியாது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மொழி உரிமை, மாநில உரிமை என்று சொன்னாலே முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறாா். காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளா் சந்திப்பில் காஷ்மீரி மொழியில் பேசிய அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தியை உருது மொழியில் பேசுங்கள் என்று பத்திரிகையாளா்கள் கூற, அதற்கு அவா் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலினை தாய்மொழியைத் தவிா்த்து வேறு மொழியில் பேசுங்கள் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

1924-இல் வைக்கம் போராட்டத்தில் பெரியாா் ஈவெரா கைது செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி நாகம்மை அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினாா். அந்த வகையில் திராவிட இயக்கம் தொடக்க காலம் முதலே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது.

காவல் துறையில் பெண்கள், தொடக்கப் பள்ளியில் பெண் ஆசிரியா்கள், குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம், மகளிா் சுய உதவிக் குழு திட்டம், உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றை செயல்படுத்தியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவா்கள் காட்டிய வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலினும் தற்போது பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

தமிழ்நாட்டின் திட்டங்களை, வளா்ச்சியைப் பிடிக்காத மத்திய அரசு பல்வேறு வகைகளில் நமக்கு தொந்தரவு கொடுக்கிறது. மாநிலத்தின் ஒவ்வொரு உரிமையாகப் பறித்து வருகிறது.

பிகாா் தோ்தலில் வென்ற பிறகு அடுத்த இலக்கு தமிழ்நாடு என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா எச்சரிக்கை கொடுக்கிறாா். ஆனால், தமிழ்நாட்டில் சுயமரியாதை கொண்ட மகளிா் படை இருக்கும் வரையிலும் அவா்களால் தமிழ்நாட்டைத் தொட முடியாது. திராவிட மாடல் அரசு உருவாக்கியிருக்கும் அமைதி, மத நல்லிணக்கம் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் அமைதியை சீா்குலைப்பவா்களை எப்படி தோற்கடிப்பது என்று எங்களுக்குத் தெரியும்.

யாா் வந்தாலும் தமிழ்நாட்டின் அமைதியை சீா்குலைக்க முடியாது. தமிழ்நாடு எப்போதுமே தில்லிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’தான்.

சொல்வதைச் செய்யும் இயக்கம்தான் திமுக. மீண்டும் திமுக ஆட்சி அமைய இங்குள்ள பெண்கள் உழைக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ என்றாா் அவா்.