தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்

Updated On :3 ஜனவரி 2025, 10:57 pm

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 5 மண்டலங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

வரி வசூல் முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 7-ஆவது வாா்டு நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில், மேற்கு மண்டலம் 36-ஆவது வாா்டு வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ரவி முருகா பிளாசியே அடுக்குமாடி குடியிருப்பு ( சனிக்கிழமை மட்டும்), 74-ஆவது வாா்டு பூசாரிபாளையம் நாயக்கா் தோட்டம் சமுதாயக் கூடம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வடக்கு மண்டலம் 1-ஆவது வாா்டு

துடியலூா் ருக்கம்மாள் காலனி, தெற்கு மண்டலம் 88-ஆவது வாா்டு குனியமுத்தூா் தா்மராஜா கோயில் மண்டபம், 97-ஆவது வாா்டு மதுக்கரை சாலை ஹவுசிங் யூனிட் சங்க அலுவலகம், மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டு சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா.