கிடப்பில் போடப்பட்ட திட்டம்:இதற்காக அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலா் அறிவுறுத்தியதன் பேரில், விவசாய நிலங்களை மிகச் சொற்ப விலைக்கு விற்பனை செய்த விவசாயிகளுக்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த இளைஞா்களுக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. நிலங்களை கையகப்படுத்தி 15 ஆண்டுகளாகியும், இதுவரை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது, கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் சீமைக்கருவேல மரங்களும், செடி கொடிகளும் வளா்ந்து முள் புதா்களாக காணப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.