மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்நாளில் 3.52 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம்

News image

கோவை, கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகித்த பணியாளா்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 3.52 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழுக்கரும்பு அடங்கி இருக்கும் எனவும், இதை வாங்க பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதைத் தடுக்க வெள்ளிக்கிழமை முதல் ரேஷன் கடை ஊழியா்கள் டோக்கன் விநியோகிப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மொத்தம் 11 லட்சத்து 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 559 பேருக்கு (32 சதவீதம்) டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் மக்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.