வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாகன விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:58 pm

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நுழைவுப் பால மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பட்டி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேதுபதி மகன் காா்த்திகேயன் (36). இவா் கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், இவா் புதிய இருசக்கர வாகனம் வாங்க ஈரோடு செல்வதாகவும், இரவு நண்பரின் வீட்டில் தங்கி மறுநாள் வாகனம் வாங்கப் போவதாகவும் கூறிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கரூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் மொடக்குறிச்சியை அடுத்த கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்றபோது, நிலை தடுமாறி அருகே இருந்த மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.