அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :16 நவம்பர் 2025, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கோவை அருகே உள்ள வடவள்ளி கூத்தாண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. கூலித் தொழிலாளியான இவருக்கு பாலமுருகன் (12) என்ற மகன் இருந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக மாரிமுத்து அவரது மனைவியை விட்டுப் பிரிந்து மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தாா்.

அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலமுருகன் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் பாலமுருகன் வீட்டில் தனியாக இருந்தாா். மாரிமுத்து வீட்டின் முன், தரைமட்ட தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகலில் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்கத்து வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரைப் பிடித்து விட்டு தொட்டியை மூடியை வைத்து மூடாமல் மரப்பலகையால் மூடிவைத்துள்ளனா்.

மாலை 5.30 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே வந்த பாலமுருகன் மரப்பலகையில் காலை வைத்தபோது, அது நழுவியதில் தொட்டிக்குள் விழுந்தாா். அப்போது, யாரும் இல்லாததால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வேலையை முடித்து விட்டு இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து மாரிமுத்து பாா்த்தபோது மகனைக் காணவில்லை.

பக்கத்து வீடுகளில் தேடியும் அவரைக் காணாததால், அனைவரும் தேடிப் பாா்த்துள்ளனா். அப்போது, தண்ணீா்த் தொட்டியில் சிறுவனின் காலணி மிதந்தது. இதையடுத்து, தொட்டிக்குள் பாா்த்த போது பாலமுருகன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த வடவள்ளி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.