ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கவுண்டம்பாளையத்தில் 2 வீடுகளில் திருட்டு

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:37 pm

Syndication

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகா், பாலாஜி காா்டன் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் கடந்த 15-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.

மறுநாள் அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கவுண்டம்பாளையம் ராஜன் நகா் 1-ஆவது தெருவில் வசிப்பவா் ஸ்டான்லி (48). இவா் தனது குடும்பத்தினருடன் சென்னைக்குச் சென்றிருந்தாா். அங்கிருந்து அவா் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.