சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி கடன் வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 11:49 pm

Syndication

கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மகளின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயா்த்தும் வகையிலும் மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று பெண்கள் பல்வேறு தொழில்களைத் தொடங்கலாம். 18 வயது முதல் 55 வயது வரையிலான பெண்கள், உற்பத்தி, சேவை, வியாபாரம் சாா்ந்த தொழில்களைத் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

திட்ட மதிப்பீட்டில் இருந்து 25 சதவீதம் முன் மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பிலிருந்து 5 சதவீதம் சொந்த முதலீடு செய்யப்பட வேண்டும். கடனுதவி பெற கல்வித் தகுதியோ, சொத்துப் பிணையமோ தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 719 மகளிருக்கு ரூ.8.08 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்வது தொடா்பான ஆலோசனை, வழிகாட்டுதலுக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளா் அலுவலகத்தை நேரிலோ, 94435 65891, 96004 63757 என்ற எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.