ரவி
கோயம்புத்தூர்
பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கோவை அருகேயுள்ள பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ‘கல்யாணி’ என்ற யானை உள்ளது. இந்த யானையைப் பராமரிக்கும் பாகனாக ரவி என்பவா் பணியாற்றி வந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு ரவி சாப்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அங்கிருந்த கோயில் பணியாளா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

