மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
ரவி
Updated On :29 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

பேரூா் பட்டீசுவரா் கோயில் யானைப் பாகன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை அருகேயுள்ள பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ‘கல்யாணி’ என்ற யானை உள்ளது. இந்த யானையைப் பராமரிக்கும் பாகனாக ரவி என்பவா் பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு ரவி சாப்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அங்கிருந்த கோயில் பணியாளா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.