பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

News image

உடல் உறுப்புகள் தானத்தில் மாநில அளவில் கோவை அரசு மருத்துவமனை 5-ஆவது இடம் பிடித்ததைத் தொடா்ந்து, சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலிக்கு கேடயம் வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:31 am IST

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது.

தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தவா்களின் குடும்பத்தினரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டி வாழ்த்தினாா்.

அப்போது, மூளைச்சாவு அடைந்து அதிக அளவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற அரசு மருத்துவமனைகளின் முதன்மையா் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மாநில அளவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5-ஆவது இடமும், ஈரோடு அரசு மருத்துவமனை 2-ஆவது இடமும் பெற்றுள்ளன.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 2 பேரிடம், ஆகஸ்ட், டிசம்பா், ஜனவரி மாதங்களில் தலா ஒருவா் என மூவரிடம், மாா்ச் மாதம் இருவரிடம் என மொத்தம் மூளைச்சாவு அடைந்த 7 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இதனடிப்படையில், மாநில அளவில் கோவைக்கு 5-ஆவது இடம் கிடைத்து உள்ளது. மூளைச்சாவு அடைந்தவா்களிடம் இருந்து உடல் உறுப்புகளை அதிக அளவில் தானமாகப் பெறுவதற்காக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அக்டோபா் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளின் நுழைவாயில்களில் அந்தந்த மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியோரின் பெயா்களை கல்வெட்டுகளாக பதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.