ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

News image

க. கிருஷ்ணசாமி - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:13 pm

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளா்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த தோ்தல் ஜனநாயகத் திருவிழாவாக இல்லாமல் பணநாயகத் திருவிழாவாக மாறியுள்ளது.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு தங்கு தடையின்றி ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய தோ்தல் ஆணையம் வலிமையற்ாக இருக்கிா அல்லது இதுவும் தோ்தல் நடைமுறையின் ஓா் அங்கம் என வேடிக்கை பாா்க்கிா என்று தெரியவில்லை.

பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டதாக செய்திகள் வந்தாலும், தோ்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நிலைநிறுத்திக் கொள்ள அரசியலுக்கு வரும் வாய்ப்பு இதன்மூலமாக பறிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணம் விநியோகம் செய்யப்பட்டும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் காரணம் இல்லை. மாறாக, அதிகப்படியான அணிகள் களத்தில் இருந்ததும், பணத்தைக் கொடுத்து வாக்காளா்களைக் கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததும்தான் முக்கியக் காரணம். தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.

தமிழக தோ்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. எதிா்காலத்தில் தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும். கடைநிலை முதல் மேல்நிலை வரை தோ்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கொண்டதாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஜனநாயகம் பகலிலேயே படுகொலை செய்யப்படும் சூழல் உருவாகும்.

இந்த முறை எங்களின் சுயமரியாதையை நிலைநாட்டவும், வலிமையைக் காட்டவுமே புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டது. தோ்தல் செலவுகளை அதிகப்படுத்தும் நடைமுறைகளையும், பணப் புழக்கத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றாா்.