உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், 2026ஆம் ஆண்டு மட்டும் சற்று ஸ்பெஷலாக மாறியிருக்கிறது. காரணம் கொளுத்தும் வெய்யில்தான்.
சிட்டுக் குருவி அழிந்துவிட்டது, நிலப்பரப்புகளே இல்லை, மரங்கள் வெட்டப்படுகிறது என இத்தனை காலமும் சுற்றுச்சூழல் நாள் அன்று மனிதர்கள் வெட்கமே இல்லாமல் எழுதியும், சொல்லியும் வந்திருக்கிறோம்.
இப்படியே சென்றால் 2050ம் ஆண்டில் அதிக வெப்பம், 2030-ல் கடல் உள் வாங்கும் என்று படிக்கும்போதுகூட, அத்தனை காலம் நாம் இருக்கப் போகிறோமா என்ன? என்று பலரும் போகட்டும் என்று கடந்து சென்று விடுவோம்.
ஆனால், மக்கள் நினைத்தது போல இயற்கை அவ்வளவு அமைதியானது இல்லை என்பதை இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
உடனடியாக மரங்களை நட வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டுவதைத் தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், காற்று மாசுபாட்டைக் குறைக்க எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று ஆண்டுதோறும் சொல்வது ஒரு வழக்கமாகிப் போனதால், இந்த முறையும் அதைச் சொல்லிவிடலாம். ஆனால், யாரும் இதைச் செய்யப்போவதில்லை. அப்படியே செய்தாலும் கடந்த 200 ஆண்டு காலமாக நாம் படிப்படியாக செய்து மாற்றங்கள் மாறப்போவதில்லை. இயற்கையும் நம்மை விடப்போவதில்லை.
ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பசுமைப் பகுதிகளை விரிவுபடுத்துவது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாணவர்களுக்கும் பாடமெடுக்கப்படும். கல்லூரி மாணவர்கள் குப்பைகளைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுவார்கள். குளங்கள் சீரமைக்கப்படும். அடுத்தநாள் வழக்கம்போலத்தான்.. 364 நாளக்ளும் அதே சுற்றுச்சூழலை கெடுக்க மனிதனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பார்கள்.
ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பின் எதிரொலி குறித்து கவலைப்பட இன்னும் அதிக நாள்கள் இல்லை. அதிகரித்து வரும் வெப்பம், மிக மோசமான வானிலை மாறுபாடுகள், அதி தீவிர கனமழை, காற்று மாசுபாடு என அனைத்தும் மக்களை சுற்றிப்போட்டுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளால் சிக்கித் தவிக்கிறார்கள். இங்கே சுவாசிக்க முடியவில்லை என தில்லி மக்கள் கூக்குரலிடுகிறார்கள். இன்று நாட்டின் வெப்பமான நகரம் என நாள்தோறும் தரவு வெளியிடுகிறது வானிலை ஆய்வு மையம். இதிலிருந்து மீள வழியேயில்லை. இந்த ஆண்டு வெய்யிலில் தப்பிப் பிழைத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடிக்கும் வெய்யிலில் செத்து மடியத்தான் போகிறான் மனிதன்.
இயற்கையை அப்படியே விட்டுவிட்டால்கூட அது எப்படியோ மீண்டுவிடும். ஆனால், கொன்று புதைத்து, எங்கே முளைத்துவிடுமோ என ஆசிட் ஊற்றிய பிறகு, சுற்றுச்சூழல் தினங்களைக் கொண்டாடி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதே நாள்தோறும் கடும் வெய்யிலில் வேலை செய்துகொண்டிருக்கும் சாமானிய மனிதர்களின் எண்ணமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

சட்டவிரோத மணல் கொள்ளை: சுற்றுச்சூழல் நிா்வாகம் முறையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



