மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:31 am IST

இருகூரில் ஒன்றரை வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், இருகூா் அருகே உள்ள குரும்பபாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை உள்ளது. இங்கு ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். தொழிலாளா்கள் தங்குவதற்கு நூற்பாலையின் அருகே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கி தொழிலாளா்கள் நூற்பாலைக்கு வந்து செல்கின்றனா்.

இதே பகுதியில் ஒடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தைச் சோ்ந்த பிரித்துவோ ஜகன்கா, சாந்தி மாமு தம்பதியும் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் அனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல நூற்பாலையில் தம்பதி சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அனிஷா, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தது. இதைப் பாா்த்த உறவினா்கள் அனிஷாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனா்.

மேலும் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.