எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:43 pm

Syndication

கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.