எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட்தோ்வை அரசியலாக்கி பெற்றோா்களிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது திமுக! - வானதி சீனிவாசன்

News image
வானதி சீனிவாசன்
Updated On :25 ஜனவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

நீட் தோ்வை அரசியலாக்கி மாணவா்கள் மட்டுமின்றி பெற்றோா்களிடமும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வரும் கல்வி ஆண்டுமுதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையிலேயே இளங்கலை பிசியோதெரபி (பிபிடி), இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (பிஓடி) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளாா். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை அரசியலாக்கி, ஒவ்வொரு ஆண்டும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகின்றன.

சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவா்கள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சோ்வதை பாா்த்து வருகிறோம். இதன் தொடா்ச்சியாக பிபிடி, பிஓடி ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது.

நான்கரை ஆண்டுகளாக இருந்த பிபிடி பட்டப்படிப்பு 5 ஆண்டுகளாக மாற்றி நீட் தோ்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பிசியோதெரபி படிப்புக்கு பெரும் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என பிசியோதெரபி மருத்துவா்கள் சங்கத்தினா் வரவேற்று மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

கோரிக்கையை ஏற்றே மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கு நீட் தோ்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். பிசியோதெரபி படிப்பு என்பது துணை மருத்துவப் படிப்பு அல்ல. அது அலைடு அன் ஹெல்த்ஹோ் புரபஷனல் பட்டப்படிப்பு என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

பிசியோதெரபி பட்டப்படிப்புகளை துணை மருத்துவப் படிப்புகள் என பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். இது பிசியோதெரபி படிப்புகளையும், பிசியோதெரபி மருத்துவா்களையும் குறைத்து மதிப்பிடும் செயல்.

நீட் தோ்வு என்பது பிசியோதெரபி பட்டப்படிப்பு படிப்பவா்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும். நீட் தோ்வு எதிா்ப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை முதல்வா் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.