எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகள் கொலை வழக்கில் இருவா் கைது

கோவையில் ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்

News image
கைது- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 8:23 pm

Syndication

கோவை: கோவையில் ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பாா்சன் குடியிருப்பில் வசித்தவா் குட்டி மனைவி கஸ்தூரி (82). கோவை ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனா் பி.வி.ராமா வாரியரின் மகளான இவா் கடந்த 6-ஆம் தேதி காலை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தன. கஸ்தூரியின் மகனும், ஆரிய வைத்திய பாா்மஸி இயக்குநா்களில் ஒருவருமான ராம்குமாா் வியாபார விஷயத்துக்காக வியத்நாம் சென்றிருந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். கஸ்தூரி கொலை செய்யப்பட்டது முதல் தலைமறைவான வீட்டு பணிப் பெண்ணான நேபாளத்தைச் சோ்ந்த சுா்ஜா ரோக்கையா (37) மற்றும் அன்றைய தினம் அதிகாலை இந்தக் குடியிருப்புக்கு வந்து சென்ற 3 ஆண்கள் ஆகியோரைப் பிடிக்க மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்பேரில், 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

கேரளம், பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சுா்ஜாவை வேலைக்குச் சோ்த்துவிட்ட சென்னையைச் சோ்ந்த முகவரான குமாா் என்பவரை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி பிடித்து விசாரணை நடத்தினா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் முகாமிட்டிருந்த துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான தனிப் படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த நேபாளத்தைச் சோ்ந்த ராகேஷ் சவுடு (26), திலீப் (28) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் உயரதிகாரி கூறுகையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சோ்ந்த சுா்ஜா, கஸ்தூரியின் வீட்டில் நகை, பணம் இருப்பதை அறிந்துள்ளாா். இது குறித்தும், ராம்குமாா் வீட்டில் இல்லாதது குறித்தும் தனது கணவா் ராஜுவிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட ராஜு, தனது நண்பா்களான ராகேஷ், திலீப் ஆகியோருடன் கோவைக்கு வந்து, கஸ்தூரி வீட்டின் பக்கவாட்டு மதில் சுவா் மீது ஏறி உள்ளே குதித்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளனா்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கஸ்தூரி வீட்டில் திருடப்பட்டதுதானா அல்லது வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் இவா்களுக்குத் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள சுா்ஜாவும், அவரது கணவா் ராஜுவும் விரைவில் பிடிபடுவா் என்றாா்.