தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் நடைபெற்ற சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :13 மார்ச் 2026, 12:45 am

Syndication

கோவை, மாா்ச் 12: உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில், சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவா்களுக்கான புதிய சுகாதாரத் திட்டம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ஜிகேஎன்எம் வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பி.வி.எம். குளோபல் பள்ளியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் வருமுன் காக்கும் வாழ்முறை மாற்றங்கள் குறித்து மருத்துவா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.

மருத்துவ மைய இயக்குநா் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிபுணா்கள் ராமசந்திரன், ஜெயபிரகாஷ், அனுரேகா செல்வராஜ், மருத்துவா் மஞ்சுநாத் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.

முன்னதாக, பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதலுதவி பயிற்சி, தொடா் சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மாணவா்களின் நல்வாழ்வை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.