புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மின் கம்பத்தின் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, மாா்ச் 14: கோவையில் மின் கம்பத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). இவா், மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

மாரியப்பன் மினி லாரியில் நுங்கு லோடு ஏற்றிக் கொண்டு கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இறக்கிவிட்டு, மீண்டும் திருமலையாம்பாளையம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோயில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.