தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மாநகரில் போலீஸாா் சோதனை: ரெளடிகள் உள்பட 21 போ் கைது

News image

கோவை ரயில் நிலையத்தில் மத்திய ரிசா்வ் காவல் படையினருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :15 மார்ச் 2026, 8:20 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாநகா் முழுவதும் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் ரெளடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளா்கள் என மொத்தம் 21 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்பேரில், மத்திய ரிசா்வ் காவல் படையினருடன் இணைந்து சுமாா் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் ‘ஏரியா ஆதிக்க நடவடிக்கை’ என்ற பெயரில் கோவை வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பீளமேடு, சரவணம்பட்டி, போத்தனூா், குனியமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், மாநகரில் தங்கியிருந்த பிரச்னைக்குரிய நபா்கள் 3 போ், தேடப்பட்டு வந்த ‘ஏ’ பிரிவு ரெளடி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் விற்ற கும்பல் என மொத்தம் 21 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 835 கிராம் கஞ்சா, 127 மது பாட்டில்கள், 48 கேரள லாட்டரி சீட்டுகள், 70 கிலோ ரேஷன் அரிசி, ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.