தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:14 pm

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயிரம் எரிவாயு உருளைகளை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரான காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், எரிவாயு உருளை பதுக்கலில் காா்த்திக்கின் மனைவி திவ்யபாரதி (30), உருளை விநியோகிப்பாளா்களான கரூரைச் சோ்ந்த கணேசமூா்த்தி (40), பிரதீப் (40) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.