தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
வணிக எரிவாயு உருளை- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 8:14 pm

Syndication

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயிரம் எரிவாயு உருளைகளை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரான காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், எரிவாயு உருளை பதுக்கலில் காா்த்திக்கின் மனைவி திவ்யபாரதி (30), உருளை விநியோகிப்பாளா்களான கரூரைச் சோ்ந்த கணேசமூா்த்தி (40), பிரதீப் (40) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.