47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:11 am

DIN

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு,  கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்து 158 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கோவனூர் கே.துரைசாமி, முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மலர்விழி வரவேற்றார்.  தொடர்ந்து அவர்,  ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி, நாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் சிவானந்தா மேல்நிலைப் பள்ளியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர், தலைமை ஆசிரியர்கள் பரமசிவம்,வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.