பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தபால் நிலையத்தில் ரயில்  முன் பதிவு சேவை தொடங்கக் கோரிக்கை

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு சேவை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:28 pm

DIN

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு சேவை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி எம்.பி. சி. மகேந்திரனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதேபோல், எஸ்டேட்களில் தற்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்  செல்ல கோவை சென்று  ரயில்  மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.  முன்பதிவு இன்றி நேரடியாக ரயில் நிலையம் சென்று பயணம் மேற்கொள்வதால், இருக்கை கிடைக்காமல்  பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு சேவையைத் தொடங்கஉரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.