சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 6) இரண்டு அடுக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
உதய் ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்ட இந்தச் சிறப்பு ரயில் 6-ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலில் 8 குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட புதிய வகை இரண்டு அடுக்கு உதய் ரயில் பெட்டிகள் உள்ளன. 3 ரயில் பெட்டிகளில் உணவருந்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலா 104 பயணிகளும், உணவு வசதி இல்லாத 5 ரயில் பெட்டிகளில் தலா 120 பயணிகளும் பயணிக்கலாம்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 5) காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






