கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சென்னை - கோவை இரண்டு அடுக்கு  சிறப்புக் கட்டண ரயில் நாளை இயக்கப்படுகிறது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 6) இரண்டு அடுக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:49 am IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 6) இரண்டு அடுக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
உதய் ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்ட இந்தச் சிறப்பு ரயில்  6-ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு  சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.  இந்த ரயிலில் 8 குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட புதிய வகை இரண்டு அடுக்கு உதய் ரயில் பெட்டிகள் உள்ளன. 3 ரயில் பெட்டிகளில் உணவருந்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில்,  தலா 104 பயணிகளும், உணவு வசதி  இல்லாத 5 ரயில் பெட்டிகளில் தலா 120 பயணிகளும் பயணிக்கலாம்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 5) காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.