மேட்டுப்பாளையத்தை அடுத்த தென் பொன்முடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென் பொன்முடி, ஈஸ்வரியம்மாள்- பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.37 கோடி மதிப்பில் ஆறு வகுப்பறைகள், இரு ஆய்வகங்கள், இரு கழிப்பறைகளுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் தலைமையில் பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
பள்ளித் தலைமையாசிரியர் புனிதா, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் விஜயபாஸ்கர், சத்துணவு அமைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியைகள் புனிதா, கல்யாணி, அலுவலர்கள் சற்குணம், ராமசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.