/
மதுக்கரை அருகே 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த மாசேகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் பாம்பு இருந்தது
திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ், நேதாஜி பாம்புகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சுரேந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த சுரேந்திரன் இயந்திரத்தில் இருந்த 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








