வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பன்னிமடையில் மளிகைக் கடையை சேதப்படுத்திய யானை

துடியலூருக்கு மேற்கே உள்ள பன்னிமடை கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த ஒற்றை யானை

Updated On :25 டிசம்பர் 2018, 8:35 am IST

துடியலூருக்கு மேற்கே உள்ள பன்னிமடை கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த ஒற்றை யானை, அங்குள்ள மளிகைக்கடையை உடைத்து உணவுப் பொருள்களை தின்றது. 
மலையடிவார கிராமமான இப்பகுதியில் சமீபகாலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை பள்ளியின் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்தியது. 
இந்நிலையில், இங்குள்ள தர்மராஜா கோயில் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் வந்த ஒற்றை யானை, அங்குள்ள வளர்மதி என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையின் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி, புளி, பருப்பு உள்ளிட்டவற்றை வெளியே இழுத்து போட்டு தின்றது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.