ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவமனை ஊழியருக்கு கோவை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். கோவை, காந்திபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த
பதிவேடு ஊழியர் மணியன் சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ரமேஷிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து
அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மணியனிடம் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கானது கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜான்மினோ புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், மணியனுக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் இருந்து பிணையில் வெளியே வந்த மணியன் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

