கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் ஆனைகட்டி பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 29) இலவச சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
ஆனைகட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமை உயர்நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவருமான குலுவாடி ஜி.ரமேஷ் தொடங்கி வைக்கிறார்.
இந்த முகாமை, சமூக நலத் துறை, வருவாய், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை, சுகாதாரம், தொழிலாளர், காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள், அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்துகிறது.
மேலும் இந்த முகாமில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாமும் நடைபெற இருப்பதால் சுற்றுப் பகுதி மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

