கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதிக்குள்பட்ட போலேகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தராஜ் (33). சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நந்தராஜுக்கு திருமணம் நடந்தது. சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மே தின விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில் கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் நந்தராஜின் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பகுதியில் மின்கம்பி அறுந்து கம்பிவேலி மீது விழுந்துள்ளது. இதை அறியாமல் வெள்ளிக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக மின்கம்பியை நந்தராஜ் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்

பண்ணாரி அம்மன், பவானிசாகா் அணை, புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய பவானிசாகா்!

யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


