கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மே 2026, 11:29 pm

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதிக்குள்பட்ட போலேகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தராஜ் (33). சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நந்தராஜுக்கு திருமணம் நடந்தது. சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மே தின விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் நந்தராஜின் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பகுதியில் மின்கம்பி அறுந்து கம்பிவேலி மீது விழுந்துள்ளது. இதை அறியாமல் வெள்ளிக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக மின்கம்பியை நந்தராஜ் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.