வைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 4:59 am IST

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதிக்குள்பட்ட போலேகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தராஜ் (33). சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நந்தராஜுக்கு திருமணம் நடந்தது. சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மே தின விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் நந்தராஜின் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பகுதியில் மின்கம்பி அறுந்து கம்பிவேலி மீது விழுந்துள்ளது. இதை அறியாமல் வெள்ளிக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக மின்கம்பியை நந்தராஜ் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.