மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேன் - ஆட்டோ மோதல்: 7 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே வேன் - ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

Updated On :14 மே 2018, 7:39 pm

பொள்ளாச்சி அருகே வேன் - ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர், தனது உறவினர்களுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வேனில் சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் ஆனைமலையில் இருந்து திருப்பூருக்கு பொள்ளாச்சி வழியாக சென்றுகொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி - ஆனைமலை சாலையில், நஞ்சேகவுண்டன்புதூர் அருகே மாலை 4.30 மணி அளவில் அவர்களது வேன் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோவும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், வேனில் பயணம் செய்த ராஜேஷ் (33), அவரது மனைவி ஜீவா (32), அங்கமுத்து (34), அவரது மனைவி அனிதா வின்னரசி (32), அங்கமுத்துவின் இரண்டரை மாதப் பெண் குழந்தை, மோனிகா(25), விமலா (26) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.