ரயில் இ - டிக்கெட் மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை பாலக்காடு ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் சிலர் போலியான அடையாள அட்டை தயாரித்து ரயில் இ - டிக்கட்டுகளைப் பெற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மேத்யூசெபஸ்டியன் தலைமையிலான ரயில்வே காவல் துறையினர் பொள்ளாச்சியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் நவம்பர் 2ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதில், பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் போலியாக பல வாடிக்கையாளர் அடையாள அட்டைகளைத் தயாரித்து டிக்கட் பெற்று, அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ரூ. 23 ஆயிரத்து 900 மதிப்பிலான 11 டிக்கட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) என்பவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








