பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

அரசு, தனியார் மருத்துவமனை, கிளினிக்குகளை பதிவு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை , கிளினிக், பரிசோதனை மையங்கள்

Published On :

கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை , கிளினிக், பரிசோதனை மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், பல் மருத்துவமனை, கிளினிக், ஆயுஷ் கிளினிக், எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம் (லேப்), சித்தா கிளினிக், எம்.ஆர்.ஐ. சிடி ஸ்கேன் மையம் மற்றும் அனைத்து கிளினிக்குகளும் தமிழ்நாடு மருத்துவ ஒழுங்குமுறை சட்டம் 2018ன் படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு பதிவுக்கான விண்ணப்பத்துடன் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் என்ற பெயரில் ரூ.5 ஆயிரத்திற்கு வங்கி வரைவோலை மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
புதிய மருத்துவ ஸ்தாபனம் தொடங்கிய நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள்ளும், ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருக்கும் மருத்துவ ஸ்தாபனங்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் (மார்ச் 3, 2019) பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-2220364 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.