தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

நண்பரை கீழே தள்ளி கொலை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்

பொள்ளாச்சி அருகே தகராறில் நண்பரை கீழே தள்ளி கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:16 am IST

பொள்ளாச்சி அருகே தகராறில் நண்பரை கீழே தள்ளி கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (58).  இவர் மில்களுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் செல்வராஜ் (42). இவர் பொள்ளாச்சியை அடுத்த கே.நாகூரில் விவசாயப் பணிக்கு பவர் டில்லரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
 இந்நிலையில், பொள்ளாச்சி அருகே கே.நாகூர் சேந்து கிணறு வீதியில் வசித்து வரும் செல்வராஜை சந்திக்க சுப்பிரமணி தனது மனைவி சத்தியவாணியுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அப்போது, சுப்பிரமணியம், செல்வராஜும் பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
 இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ், வேகமாக தள்ளியதில் சுப்பிரமணி வீட்டு வாசலின் முன்பு கீழே விழுந்து மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இது குறித்து தகவலறிந்த கோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குப்புசாமி சம்பவ இடத்துக்குச் சென்று சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான செல்வராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.