கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஜெர்மன் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கட்டுமானங்கள், கட்டடக் கழிவுகள் மேலாண்மை, மரக்கன்று நடவு செய்தல், வீடுகளில் சூரிய சக்தி மின் விளக்குகள் பயன்பாடு, பசுமைக் கட்டடங்கள் மற்றும் நகரில் மேற்கொள்ள வேண்டிய பசுமைப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


