கஞ்சா விற்றதாக இளைஞர்கள் இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
கோவை, முத்தண்ணன்குளம் அருகே ஆர்எஸ்புரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தடாகம் சாலையைச் சேர்ந்த அருண்(21) என்பது தெரியவந்தது. இதேபோல கோவை, ரெயின்போ காலனி பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி அவரது வாகனத்தை குனியமுத்தூர் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில் 1.6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், கோவை, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிசாருதீன் (23) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.900 பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மகளிா் கல்லூரி விளையாட்டு, ஆண்டு விழா பரிசளிப்பு

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
