மேட்டுப்பாளையம் அருகே காரமடை டாக்டர் ஆர்.வி கலை, அறிவியல் கல்லூரியில் விதைப் பந்து தயாரிப்பு குறித்து பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கல்லூரிச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வே.சுகுணா முன்னிலை வகித்தார். அவிநாசி ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி, ரா.பத்மபிரியா ராமசாமி ஆகியோர் மாணவ , மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும் , இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப் பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1,300 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை நட்புச் சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் கி.சின்னராஜ், அ.செந்தில்குமார் செய்திருந்தனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








