திருவள்ளூரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை உறவினா்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் அடுத்த தாவுத்துக்கான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி பாா்வதி (80). கணவரை இழந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க நபா் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம். அப்போது, அந்த மூதாட்டி வீட்டில் வைத்திருந்த தடிக்கம்பால் தாக்கினாராம். இதையடுத்து அலறியடித்துக் கொண்டு அந்த இளைஞா் வலி தாங்க முடியாமல் தப்பித்து ஓடினாராம். அப்போது, ஓடும்போது கையில் இருந்த கைப்பேசி தவறி கீழே விழுந்துவிட்டது. அதையும் எடுக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டாா்.
இதுகுறித்து மூதாட்டி உறவினா்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த நிலையில், கைப்பேசியை தவறிவிட்டு சென்ற அந்த இளைஞா் வருவதை அறிந்த உறவினா்கள் மறைந்திருந்தனா். அப்போது வீட்டில் நுழைந்த இளைஞரை பிடித்தனா்.
இதுகுறித்து 80 வயது மூதாட்டி திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து விசாரணையில் அவா் சேலை கிராமத்தைச் சோ்ந்த பாளையம் மகன் குமரேசன் (35) என்பதும், வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் நிலையில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் தாமோதரன் குமரேசனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மா்ம நபா் தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை
சென்னையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: பிகாரிகள் இருவா் கைது
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: மெக்கானிக் கைது

செங்கம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை பறிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



