எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

திமுக சாா்பில் அரிசி, பருப்பு விநியோகம்

கோவை மாநகரப் பகுதிகளில், ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு திமுக நிா்வாகிகள் சாா்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் விநியோகிக்கப்பட்டன.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

கோவை மாநகரப் பகுதிகளில், ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு திமுக நிா்வாகிகள் சாா்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் விநியோகிக்கப்பட்டன.

சின்னவேடம்பட்டி 42ஆவது வாா்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும், கவுண்டா் மில் பகுதியில் 300 குடும்பத்தினருக்கும் கோவை மாநகா், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் முத்துச்சாமி, சரவணம்பட்டி பகுதி பொறுப்பாளா் பையாக்கவுண்டா் ஆகியோா் அரிசி, பருப்பு, காய்கறிகளை புதன்கிழமை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, 100ஆவது வாா்டுக்கு உள்பட்ட குறிச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

இதேபோல், வடவள்ளி, சீரநாயக்கன்பாளையத்தில் 300 குடும்பத்தினருக்கும், வீரகேரளத்தில் 200 குடும்பத்தினருக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கோவை மாநகரக் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் சண்முகசுந்தரம் வழங்கினாா். இந்நிகழ்ச்சிகளில், திமுக தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.